டாஸ்மாக் (டாசுமாக், TASMAC) எனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம்.இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும்சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
வரலாறு
தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டுஎம். ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்)தலைமையிலானஅதிமுகஅரசாங்கத்தால்,தமிழகத்தில்மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது.இந்திய நிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநிலஅரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாகநிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்குஅமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம்ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின்காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971-74, 1983-87, 1990-91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழகத்தில்மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.
விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்ற இந்தியாவில்தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள், சாராயம்போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடைசெய்யப்பட்டிருந்தன. 2001 இல் மதுவிலக்குவிலக்கப்பட்டபோது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தைமீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது.சில்லறை விற்பனைக்கு மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம்விடப்பட்டன. ஆனால் பல கடை முதலாளிகள் தங்களுக்குள்குழு அமைத்து செயல்பட்டதால் (cartelisation) கடைகள்குறைவான ஏலத்திற்குச் சென்றன. இதனால் அரசுக்குப்பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ள2002-03 ஆம் நிதியாண்டில் அரசு ஏலமுறையைமாற்றியமைத்தது. ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள்ஏலம் விடப்பட்டு பின் குலுக்கல் முறையில்பிரித்தளிக்கப்பட்டன. ஆனால் முதலாளிகள் இம்முறையைஎளிதில் முறியடித்து விட்டனர். ஏலம் முடிந்தபின் பிறருக்காகவிட்டுக் கொடுத்தல், பல கடைகளை முன் திட்டமிட்டபடிஎவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்ற உத்திகளைக்கையாண்டனர். எனவே மாநில அரசு சில்லறைவிற்பனையையும் தானே செய்ய முன் வந்தது. அக்டோபர் 2003இல் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் ஒருதிருத்தத்தை செய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்திற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோகஉரிமையை அளித்தது. ஜெயலலிதா தலைமையிலானஅதிமுக அரசால் செய்யப்ப்பட்ட இம்மாற்றம் நவம்பர் 29, 2003இல் அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் திமுக இதைஎதிர்த்தாலும், 2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதிதலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடுஅரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய்கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்துசெயல்படுத்தி வந்தது இதனால் மது விற்பனையில் தமிழ்நாடுமாநில வாணிபக் கழகத்தின் தனியுரிமை தொடர்கிறது.
விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்ற இந்தியாவில்தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள், சாராயம்போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடைசெய்யப்பட்டிருந்தன. 2001 இல் மதுவிலக்குவிலக்கப்பட்டபோது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தைமீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது.சில்லறை விற்பனைக்கு மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம்விடப்பட்டன. ஆனால் பல கடை முதலாளிகள் தங்களுக்குள்குழு அமைத்து செயல்பட்டதால் (cartelisation) கடைகள்குறைவான ஏலத்திற்குச் சென்றன. இதனால் அரசுக்குப்பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ள2002-03 ஆம் நிதியாண்டில் அரசு ஏலமுறையைமாற்றியமைத்தது. ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள்ஏலம் விடப்பட்டு பின் குலுக்கல் முறையில்பிரித்தளிக்கப்பட்டன. ஆனால் முதலாளிகள் இம்முறையைஎளிதில் முறியடித்து விட்டனர். ஏலம் முடிந்தபின் பிறருக்காகவிட்டுக் கொடுத்தல், பல கடைகளை முன் திட்டமிட்டபடிஎவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்ற உத்திகளைக்கையாண்டனர். எனவே மாநில அரசு சில்லறைவிற்பனையையும் தானே செய்ய முன் வந்தது. அக்டோபர் 2003இல் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் ஒருதிருத்தத்தை செய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்திற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோகஉரிமையை அளித்தது. ஜெயலலிதா தலைமையிலானஅதிமுக அரசால் செய்யப்ப்பட்ட இம்மாற்றம் நவம்பர் 29, 2003இல் அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் திமுக இதைஎதிர்த்தாலும், 2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதிதலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடுஅரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய்கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்துசெயல்படுத்தி வந்தது இதனால் மது விற்பனையில் தமிழ்நாடுமாநில வாணிபக் கழகத்தின் தனியுரிமை தொடர்கிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசுநிறுவனம். தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகிதஉரிமையாளர். இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும்சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும்இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப) அதிகாரிகள். இதன் தலைமைஅலுவலகம் சென்னை, எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர்வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடுமாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சிமற்றும் சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டலமேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன.இவை மேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ்இயங்குகின்றது.
2010 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்திற்கு தமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன. இந்நிறுவனத்தில் மொத்தம்36,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அரசுநிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஏனைய அரசு ஊழியர்களுக்குவழங்கப்படும் சலுகைகளும் உரிமைகளும் (எட்டு மணி நேரவேலைநாள், ஊதியத்துடன் விடுமுறைகள் போன்றவை)கொடுக்கப்படவில்லை; மேலும் இவர்களுக்குதொகுப்பூதியமே வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக் கடைகளுக்குதனிப் பெயர்கள் எதுவும் கிடையாது; முன்பு டாஸ்மாக் கடைஎன்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன் அவ்வாறேஅழைக்கப்பட்டன. பின்னர் இது கோயம்புத்தூரில் நடைபெற்றஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி "தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம்" என்கிற பெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டது.இக்கடைகளில் அதிகமான கடைகளில் மது அருந்த தனிஇடவசதி (பார்) செய்து தரப்பட்டுள்ளது. இந்த மது அருந்தும்இடம் மற்றும் சிறு உணவக வசதிகளை செய்து அதற்கானகட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனி நபர்களுக்குவழங்கப்படுகிறது. இந்த உரிமை ஆண்டுதோறும் தனி ஏலம்மூலம் விடப்படுகிறது. இக்கடைகள் பொது மக்களால் "வைன்ஷாப்" என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிறமதுவகைகளும் இங்கு விற்கப்படுகின்றன.
டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய்
| ||
நிதியாண்டு
|
வருவாய்
(கோடிகளில்) |
% மாற்றம்
|
2002 - 03
|
2,828.09
| |
2003 - 04
|
3,639
| |
2004 - 05
|
4,872
| |
2005 - 06
|
6,086.95
| |
2006 - 07
|
7,300
| |
2007 - 08
|
8,822
| |
2008 - 09
|
10,601.5
| |
2009 - 10
|
12,491
| |
2010 - 11
|
14,965
|
அரசுமதுக்கடைகளைகையகப்படுத்தியபின் டாஸ்மாக்கின் வருவாய்ஆண்டுதோறும் 20 சதவிகித அளவில் அதிகரித்து வந்துள்ளது.இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டில் இதன்மொத்த வருவாய் 183 கோடி ரூபாயாக இருந்தது. சில்லறைவிற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தய நிதியாண்டில் (2002-03)இதன் மொத்த வருவாய் 3499.75 கோடிகள். இதில் அரசுக்குக்கிட்டிய வரி வருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளை நடத்தஆரம்பித்த பின் 2003-04 நிதியாண்டிற்கான வரி வருவாய் 3,639கோடியாக உயர்ந்தது.
இதில் சுங்கவரியும், விற்பனை வரியும் தலா 50 சதவிகிதம்.நிர்வாகச் செலவுகளையும், பணியாளர்ஊதியத்தொகையையும் கழித்த பின்னர், மிச்சமுள்ள வரிவருவாய் முழுக்க அரசுக்கு லாபமே. ஏனெனில் அரசே மொத்தவிற்பனையாளராகவும், சில்லறை விற்பனையாளராகவும்உள்ளதால், இரு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசின்கைக்கே வந்து சேர்கிறது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில்வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடிரூபாய்களாக இருந்தது. 2005-06 ஆம் நிதியாண்டில் 23ஆண்டுகளாக நிலைத்து வந்த மது விற்பனை வருவாய்சாதனை முறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5கோடிகளாக உயர்ந்து, 10,000 கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில் வருவாய் முறையே 12,491மற்றும் 14,965 கோடிகளாக இருந்தது. மது விற்பனையில் 80சதவிகிதம் விஸ்கி, பிராந்தி, ரம், வோத்கா போன்ற "ஹாட்"மது வகைகளும், மிச்சமுள்ள 20 சதவிகதத்தை பீர்களும்பிடித்துள்ளன.
வரி வருவாயைத் தவிர, பார் உரிமங்களை ஆண்டுதோறும்தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் அரசுக்கு வருவாய்கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் குடிப்பழக்கமும்,அவ்வப்போது நிகழும் மது விலையேற்றமும் இச்சீரானவருவாய் வளர்ச்சிக்கு காரணங்களாகக் கருதப்படுகின்றன.
- தமிழகத்தில் மது வர்த்தகம் புனரமைக்கப்பட்டபின்னர் அரசுக்கு ஆண்டுதோறும் பெருவாரியானவருவாய் கிட்டத் தொடங்கியுள்ளது. எனவேநலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசால்உயர்த்த முடிந்துள்ளது. மது வர்த்தகத்தில் கிட்டும் வரிவருவாய், அரசின் மொத்த வரி வருவாயில்சரிபாதிக்கு சற்றே குறைவாக உள்ளது. இந்தியமாநிலங்களிலேயே மது விற்பனை மூலம் வருவாய்ஈட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இதனால் மக்களிடையே குடிப்பழக்கம்அதிகமானாலும், விஷச்சாராயச் சாவுகள் பெருமளவுகுறைந்துள்ளன. (மதுவிலக்கு அமலில் உள்ளகாலகட்டங்களில் கள்ளச்சாராயச் சாவுகள்மிகுந்திருந்தன). ஏகபோக வர்த்தகத்தின் பலனாகடாஸ்மாக்நிறுவனத்தில் முறைகேடுகள் மலிந்து விட்டன..டாஸ்மாக் ஊழியர்களுக்கள் அரசு பணியாளர்களின் உரிமைகள் வழங்கப்படாமல் சுரண்டப் படுகின்றனர் என்றகுற்றச்சாட்டும் எழுந்துள்ளது
- நன்றி - டாஸ்மாக் செய்திகள்